மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை அருகே டி.கிருஷ்ணாபுரம் 6-வது வார்டில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது.எனவே மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.