அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கு

Update: 2022-08-01 09:17 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் அறுகுவிளைமேற்கு தெருவில் எப்போதும் வாகன போக்குவரத்தும், ஆட்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இங்கு ஒரு மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு உடைந்து ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த தெருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்கிறவர்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள தெருவிளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசுப்பிரமணியன், கிருஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்