மின்கம்பத்தை சூழ்ந்த செடி,கொடிகள்

Update: 2022-07-31 15:40 GMT

மின்கம்பத்தை சூழ்ந்த செடி,கொடிகள்

காங்கயம் - திருப்பூர் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் காங்கயம் - திருப்பூர் சாலை, சிவன்மலை நுழைவாயில் அருகே சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் கீழிருந்து மேலே உள்ள மின் கம்பிகள் வரை செடி, கொடிகள் படர்ந்து மின் கம்பத்தை சூழ்ந்துள்ளது. இந்த செடி, கொடிகள் மூலம் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த செடி,கொடிகளை அகற்றிட வேண்டும்.

உதயம்,காங்கேயம். 98651 80257

மேலும் செய்திகள்