விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி கூத்திப்பாறை கிராமத்தில் எண்ணற்ற பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு அமைந்துள்ள மின்கம்பமானது சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.