சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி கிராமத்தில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.