பழுதடைந்த மின்மாற்றியால் விவசாயிகள் அவதி

Update: 2022-07-30 14:17 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி பெரியபனையூரில் இருந்து காளிகளம் செல்லும் சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின்சாரத்துறை சார்பாக புதிதாக மினி மின்மாற்றி அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள விவசாய வயல் மின்மோட்டார் மற்றும் வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மினி மின்மாற்றி கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் விவசாய வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்