ஆலங்குளம் பேரூராட்சி 10-வது வார்டில் காமராஜர் நகரில் அம்பை ரோடு 4-வது சந்தில் மூன்று மின் கம்பங்கள் அமைந்துள்ளன. இந்த மின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் தெரு முழுவதும் இருட்டாக உள்ளது. மேலும் விஷ பூச்சிகள் அதிகம் நடமாடுகின்றன. எனவே, மின்விளக்கு அமைத்து தர வேண்டும்