மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி தெற்கு தெரு 6-வது வார்டு பகுதியில் கழிவுநீர் வாருகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. மேலும் பள்ளத்தின் அருகில் உள்ள மின்கம்பம் சாய்து உள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்ச உணர்வுடனே இங்கு வசித்து வருகின்றனர். எனவே பள்ளத்தை மூடி, மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.