எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-07-29 07:15 GMT

சடயமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பட்டுவிளை, கிருஷ்ணமங்கலம், செம்மன்விளை, சிவனிகோணம், அக்கரவிளை, கைதமுக்கு போன்ற பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவனி சதீஷ், சடயமங்கலம்.

மேலும் செய்திகள்