மதுரை மாநகர் 8வது வார்டு மீனாட்சியம்மன்நகர் 40அடி மெயின்ரோட்டில் உள்ள தெருவிளக்குகள் பலநாட்களாக எரியவதில்லை. இதனால் இரவுநேரங்களில் அப்பகுதி போதிய வெளிச்சம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. மக்கள் சாலையில் நடமாடமுடியாத சூழலில் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.