ஈரோடு சூரம்பட்டி பெரியார் சாலையில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். இதன் காரணமாக பேராபத்து ஏற்படலாம். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.