ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு வாயில் பகுதியில் இரண்டு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை அருகில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.