கரூர் மாவட்டம், நடையனூரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த மின்அழுத்த மின்சாரம் காரணமாக அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு அதில் இருந்து நடையனூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.