தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 11-வது வார்டு தீர்த்தகிரி நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதான தெரு விளக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே உடனடியாக மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகேஷ், தர்மபுரி.