முறையாக அமைக்கப்படாத மின் விளக்குகள்

Update: 2023-09-06 17:39 GMT

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலத்தை அழுகுபடுத்தும் வகையிலும், பாலத்தின் அடியில் சட்ட விரோத செயல்கள் நடக்காத வகையிலும் நீல நிறத்தில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் முறையாக அமைக்கப்படாமல் ஆங்காங்கே சில இடங்களில் பெயர்ந்து தொங்குவதுடன், சில இடங்களில் எரிவது இல்லை. சில இடங்களில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் மின் விளக்குகள் உள்ளதால் பொதுமக்கள் செல்லும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்