எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-09-03 11:52 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் என்.ஜி.ஓ. காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இப்பகுதியில் சென்று வரும் வகையில் சாலையோரம் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெரு விளக்குகள் முறையாக எரியாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி பெண்கள் வெளியூர் சென்று வர பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்