எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-08-27 16:44 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் கீழ் முகம் கிராமம் மல்லிப்பாளையத்தில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் மர்மநபர்களின் நடமாட்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

-ஹரிகிருஷ்ணன், மல்லிப்பாளையம், எடப்பாடி.

மேலும் செய்திகள்