சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-08-16 17:00 GMT

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ணைக்கிணர் ஊராட்சி. பண்ணைக்கிணர் ஊராட்சி முக்கூடு ஜல்லிபட்டி தனியார் பால் சேகரிப்பு மையத்திற்கு அருகே சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. இந்தப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருட்களையும் தாங்கள் விளைவித்த பொருட்களையும்வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் போது தாழ்வாக செல்லும் மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்கம்பத்தை நேராக மாற்றி அமைக்க வேண்டும்/

சுபா,குடிமங்கலம்,

8765637352

மேலும் செய்திகள்