உடைந்து தொங்கும் மின்விளக்கு

Update: 2023-08-13 13:57 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகர் இறக்கத்தின் வளைவில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கினை தாங்கி நிற்கும், கம்பி உடைந்து மின்விளக்கு தொங்குகிறது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் செல்லும்போது இந்த மின்விளக்கு அவர்கள் மீது விழுந்தால் அவர்கள் காயமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்