புகாா் பெட்டி எதிரொலி

Update: 2023-08-13 12:07 GMT
நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணியின்போது அமைக்கப்பட்ட புதிய மின் கம்பங்களில் விளக்குகள் இல்லாததால் நெல்லிக்குப்பம் சாலை சில மாதங்களாகவே இருளில் மூழ்கியிருந்தது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் நிகழும் அபாயம் இருந்தது. இது குறித்த செய்தி கடந்த 7.8.2023 அன்று தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியாகி இருந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் விளக்குகளை பொருத்தி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்