ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-08-13 11:41 GMT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திண்ணக்கோணத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மயானத்திற்கு செல்லும் வழியில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்