எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-08-13 11:41 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் சாலையோரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்