பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2023-08-09 12:33 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாகவும், தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் அருகே, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி பெயர்ந்த நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்