மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-08-06 15:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து சிந்தகம்பள்ளி செல்லும் காரகுப்பம் மேம்பாலம், எமக்கல்நத்தம் செல்லும் மேம்பாலம், பூமலை நகர் செல்லும் மேம்பாலங்களில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த மேம்பாலங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்