தெருவிளக்கு அவசியம்

Update: 2023-07-26 16:53 GMT

ஓசூர் - பாகலூர் சாலையில் காளேஸ்வரத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் பிரதான சாலையில் இருந்து, குடியிருப்பு உள்ளே செல்லும் வழியில் தெருவிளக்குகள் இல்லாததால், மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக மதுபிரியர்கள் சிலா் மது அருந்துவது போன்ற செயல்களும், சமூகவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் குடியிருப்பு மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தெருவிளக்குகளை உடனடியாக அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

-கலையரசன், ஓசூர்.

மேலும் செய்திகள்