சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2023-07-26 16:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 2-வது வார்டு நேரல கோட்டை கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு என மயானத்திகு செல்லும் சிமெண்டு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ்சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் மயானத்திற்கு உடல்களை அடக்கம் செய்ய செல்லும்போது மிகவும் சிரமமாக உள்ளது. செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே சேதமான சாலையை சீரமைத்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றவும், செடி, கொடிகளை பிடுங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-பரணி, பர்கூர்.

மேலும் செய்திகள்