குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

Update: 2023-07-19 17:49 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக குறைந்த மின்அழுத்தம் நிலவுகிறது. இதனால் மின்விசிறி கூட இயங்காததால், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்