கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு அருகில் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்நேரத்திலும் மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.