ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2022-07-24 12:54 GMT

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் காமுதோட்டத்தெரு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பமும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்