அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் இந்திரா நகர், கீழத்தெரு சுடுகாட்டுக்கு அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மின்மாற்றியை அமைத்து மக்கள் நலனை காக்க வேண்டும். கடந்த 10 மாதங்களாக மின்வெட்டு காரணமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.