ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-07-16 15:15 GMT

ஆபத்தான மின்கம்பம்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிப்பாளையம் பெரியகாட்டு தோட்டத்தில் உள்ள உயரழுத்த மின்சாரம் செல்லும் ஒரு மின்கம்பம் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மின்கம்பம் சாய்ந்த நிலையிலும் உள்ளது. அருகில் பஸ் நிறுத்தமும் உள்ளது. இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். தற்போது ஆடிக் காற்று வீச தொடங்கி உள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை பொல்லிகாளிபாளையம் (திருவள்ளுவர்நகர்) பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்பம் மாற்றப்படுமா?

பாலசுப்பிரமணியம்,கரைப்புதூர்.

9873638363

மேலும் செய்திகள்