சென்னை அரும்பாக்கம், பாரிஜாதா அம்பாள் தெருவில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. சேதமும் அடைந்துள்ளது. அதை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் சம்மந்தபட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.