உயர்கோபுர மின்விளக்கு தேவை

Update: 2026-01-25 14:31 GMT

தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் கோழிக்காட்டனூர் அடுத்து உள்ள பனங்காட்டுமேடு முதல் ஆரூர்பட்டி ஏரி பஸ் நிறுத்தம் வரை இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இரவில் வாகனங்களில் செல்பவர்கள் ஒரு சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்