கீழேவிழும் நிலையில் உள்ள மின்கம்பம்

Update: 2023-07-02 13:08 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாரணமங்கலம்-புதுக்குறிச்சி செல்லும் ஏறிப்பாதையில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான மக்கள் நடந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் வர இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தார் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்