கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமோனோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் சீரமைக்க வேண்டும்.