மின்கம்பம் சரி செய்யப்படுமா?

Update: 2022-07-23 14:55 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழுதாழை மேடு ஊராட்சி, மங்க தேவநல்லூர் 3-வது வார்டில் உள்ள ஒரு மின்கம்பம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் நட்டு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்