ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-23 14:52 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த கூத்தனூர் பகுதி மூலங்குடியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இதேபோல, கமலபுரம், வெங்காரம் பேரையூர் பகுதியிலும் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்