மின்சாதன பொருட்கள் சேதம்

Update: 2023-06-18 11:58 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் கிராமத்தில் தேவையூர் தெற்கு தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் வீட்டு மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையும், அடிக்கடி பழுதடையும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்