பொதுமக்கள் அச்சம்

Update: 2023-06-18 09:47 GMT

கணபதியை அடுத்த சின்னவேடம்பட்டியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரித்து, மீண்டும் தடையின்றி ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்