தெருவிளக்கு எரியவில்லை

Update: 2022-07-23 13:08 GMT

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் கள்ளபொம்மன்பட்டி, ராஜலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியூர் சென்று விட்டு பஸ்சில் வந்து இறங்கியும், வெளியூருக்கு செல்ல காத்திருந்து பஸ்சில் ஏறியும் செல்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் அந்த பகுதியில் அச்சத்துடனேேய இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்