தெருவிளக்கு வசதி

Update: 2023-06-11 12:16 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பிளேக் மாரியம்மன் கோவில் தெருவில் கட்டபொம்மன் வீதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்