கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையின் ஓரத்தில் மின்கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்கம்பங்களை அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.