தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2023-06-07 14:44 GMT


திருவாரூர் மாவட்டம் ,நீடாமங்கலம் தாலுகா வடுவூர் தென்பதி வடிவிராயன் தெருவில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் சென்றால் மின்கம்பிகள் உரசுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்