எரியாத கோபுர விளக்கு

Update: 2023-06-07 14:17 GMT

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ஆவின் மேம்பாலம் உள்ளது. சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து ஏராளமான பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்