கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடியில் மின்மாற்றி அமைந்துள்ளது. இதைச்சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் படர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருவதோடு, மின்விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மின்மாற்றியை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.