முறையற்ற மும்முனைமின்சாரத்தால் விவசாயிகள் அவதி

Update: 2023-05-31 10:41 GMT

முறையற்ற மும்முனை

மின்சாரத்தால் விவசாயிகள் அவதி

சேவூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், புலிப்பார், தாமரைக்குளம், சாலையப்பாளையம், ராமியம்பாளையம், வையாபுரிக்கவுண்டன்புதூர், நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், இரவில் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வினியோகிக்கின்றனர். அதிலும் இரவு நேரத்தில் சீரான முறையில் அல்லாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மின் மோட்டர் பழுது ஏற்படுவதுடன், நீர் பாய்ச்ச முடியாமல், விளைபொருட்கள் காய்ந்து இழப்பு ஏற்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

ஆனந்தமுருகன்.சேவூர்.

9876436423

மேலும் செய்திகள்