ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-05-31 09:50 GMT

சரவணம்பட்டி சத்தி மெயின் ரோட்டில் விசுவாசபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிராமல் கிடக்கிறது. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்