ஒளிராத உயர்மின் கோபுர விளக்கு

Update: 2023-05-21 11:54 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் மாரியம்மன் கோவில் திடலில், 8 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு, கடந்த சில மாதங்களாக கண் சிமிட்டியபடி போதிய வெளிச்சமில்லாததால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், இதனால் பெரும் இன்னல்களுக்குள்ளாகின்றனர். மின்கம்பத்தை பழுது நீக்கி, தரமான விளக்குகளை பொருத்தி உயர்மின் கம்ப விளக்குகளை ஒளிர விட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்