ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-05-21 09:45 GMT

கோவை நியூ சித்தாபுதூரில் உள்ள புதியவர் நகரில் கருவலூர் மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் முன்பு உள்ள அரச மரத்தை ஒட்டி மின்கம்பம் ஒன்று நிற்கிறது. இந்த மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. தற்போது அரச மரத்தால் மட்டுமே மின்கம்பம் தாங்கி பிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் உயர் அழுத்த மின்கம்பிகள் கிளைகளில் உரசியபடி உள்ளன. எனவே அந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் புதிதாக நட வேண்டும். 

மேலும் செய்திகள்