தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-07-21 16:44 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், சிலுவைச்சேரி கிராமம் சிவன்கோவில் தெருவில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது அவற்றின் மீது மின்கம்பிகள் உரச அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்